சோனியா காந்தி மாதிரி நீங்களும் உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுங்க….. நிர்பயா தாயாரிடம் மூத்த பெண் வழக்கறிஞர் வலியுறுத்தல்…..

 

சோனியா காந்தி மாதிரி நீங்களும் உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுங்க….. நிர்பயா தாயாரிடம் மூத்த பெண் வழக்கறிஞர் வலியுறுத்தல்…..

சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தியை கொன்ற குற்றவாளியை மன்னித்தது மாதிரி, நீங்களும் உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுங்க என நிர்பயா தயாரிடம் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப்பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22ம் தேதி தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்நிலையில், குற்றவாளிகள் ஒருவரான முகேஷ் சிங் தனது தண்டனையை குறைக்கும்படி குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இதனால் அவர்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. 

தூக்குத்தண்டனை குற்றவாளிகள்

தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால் தனது மனவேதனை மற்றும் ஏமாற்றத்தை ஆஷா தேவி வெளிப்படுத்தினார். அதேசமயம், முகேஷ் சிங்கின் கருணை மனுவை குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தள்ளுபடி செய்தார். டெல்லி நீதிமன்றம் பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறைவேற்ற மரண வாரண்ட் பிறப்பித்தது. 

இந்திரா ஜெய்சிங்

இந்நிலையில், உங்க மகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை மன்னித்து விடுங்க என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியிடம் மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில், ஆஷா தேவியின் வலி எனக்கு முழுமையாக தெரிகிறது. அதேவேளையில், சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தியை கொன்ற நளினியை மன்னித்தார் மற்றும் அவளுக்கு மரண தண்டனை விதிப்பதை விரும்பவில்லை என தெரிவித்தார். எனவே சோனியா காந்தியை உதாரணமாக கொண்டு அவரை பின்பற்றும்படி ஆஷா தேவியிடம் வலியுறுத்துகிறேன். நாங்கள் உங்களோடு இருக்கிறோம் ஆனால் மரண தண்டனைக்கு நாங்கள் எதிரானவர்கள் என பதிவு செய்து இருந்தார்.