சோசியல் மீடியாவால் சோகம் -தவறான போட்டோ பரவியதால் இளம்பெண் தற்கொலை – ஆண் நண்பரால் நடந்த அநியாயம் …

 

சோசியல் மீடியாவால் சோகம் -தவறான போட்டோ பரவியதால் இளம்பெண் தற்கொலை – ஆண் நண்பரால் நடந்த அநியாயம் …

மேற்கு வங்கம் நாடியா மாவட்டத்தில் தாண்டலா காவல் நிலைய எல்லையில் ஒரு பெண்ணுடைய ஆபாச படத்தை face book கில் அவரின் முன்னாள் boy friend மூலம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அவமானத்தால் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது .

மேற்கு வங்கம் நாடியா மாவட்டத்தில் தாண்டலா காவல் நிலைய எல்லையில் ஒரு பெண்ணுடைய ஆபாச படத்தை face book கில் அவரின் முன்னாள் Boy friend மூலம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அவமானத்தால் இளம் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

FB

ஆறுமாதத்துக்கு முன்னாள் பேஸ்புக்கில் ஒரு ஆணுடன் ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் நட்பால் அவரோடு பழகியிருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் பல போட்டோக்கள் எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது .அவர்களுக்குள் திடீரெனெ நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதற்கு பிறகு அப்பெண்ணின் ஆண் நண்பர் அப்பெண்ணோடு எடுக்கப்பட்ட போட்டோக்களை மார்பிங் செய்து ஆபாசமாக பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அப்பெண் அவமானத்தால் கூனி குறுகி தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பற்றி அவரின் தந்தை கொடுத்த புகாரில், அந்த Boy Friend ஒரு போலியான அக்கௌன்ட்டை திறந்து அதில் இந்த போட்டோக்களை வெளியிட்டதாக கூறினார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபரை தேடி வருகிறார்கள்.