சொல்வோம் ஆனா செய்ய மாட்டோம்…. இந்திய யாத்ரீகர்களிடம் கட்டாயம் வசூல் செய்வோம்.. மாற்றி மாற்றி பேசும் பாகிஸ்தான்

 

சொல்வோம் ஆனா செய்ய மாட்டோம்…. இந்திய யாத்ரீகர்களிடம் கட்டாயம் வசூல் செய்வோம்.. மாற்றி மாற்றி பேசும் பாகிஸ்தான்

கராத்பூர் குருத்வாராவுக்கு வரும் இந்திய யாத்ரீகர்களிடம் தொடக்க விழா நாளில் நுழைவு கட்டணம் வாங்க மாட்டோம் என முதலில் கூறி விட்டு, தற்போது வழித்தடம் தொடக்க விழா நாளிலும் கட்டணம் வசூலிப்போம் என பாகிஸ்தான் மாற்றி பேசியுள்ளது.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது. இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து விட்டது. இன்று காலை 11 மணிக்கு பாகிஸ்தானில் இம்ரான் கான் கர்தாபூர் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். 

கராத்பூர் குருத்வாரா

இந்நிலையில், கடந்த 1ம் தேதியன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் டிவிட்டரில், இந்தியாவிலிருந்து கர்தாபூர் குருத்வாராவுக்கும் வரும் யாத்ரீகர்களுக்கு பாஸ்போர்ட் அவசியல் இல்லை. செல்லத்தக்க அடையாள அட்டை இருந்தாலே போதும். இனி பயணத்துக்கு 10 நாள் முன்னதாக பதிவு செய்ய வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. மேலும், கர்தார்பூர் வழித்தடம் தொடக்க நாளன்றும், குருநானக்கின் 550 பிறந்தநாளான நவம்பர் 12ம் தேதியும் இந்திய யாத்ரீகர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது என பதிவு இருந்தார்.

கட்டணம்

ஆனால் கராத்பூர் வரும் இந்திய யாத்ரீகர்கள் கட்டாயம் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என பாகிஸ்தானின் ராணுவ செய்தி தொடர்பாளர் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். இதனையடுத்து, ஒப்பந்தப்படி, கராத்பூர் செல்லும் யாத்ரீகர்கள் அனைவரும் கையில் பாஸ்போர்ட் வைத்திருக்கும்படி மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது கராத்பூர் வழித்தடம் தொடக்கவிழா நாளிலும் கட்டணம் (சுமார் ரூ.1,400) வசூலிப்போம் என பாகிஸ்தான் மீண்டும் மாற்றி பேசியுள்ளது. இது யாத்ரீகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.