சொன்ன சொல் தவறாத‌ கோட்டைச்சாமி! தேர்தல் தோல்விக்காக ஜீவசமாதியானாரா பாபா?

 

சொன்ன சொல் தவறாத‌ கோட்டைச்சாமி! தேர்தல் தோல்விக்காக ஜீவசமாதியானாரா பாபா?

தன்னுடைய யாகத்தின் வலிமையால் வேட்பாளரை தேர்தலில் வெற்றிபெற வைப்பதாகவும், அப்படி தன் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றிப்பெறவில்லை என்றால், ஜீவசமாதி அடைவதாகவும் அறிவித்த கம்ப்யூட்டர் பாபாவை மீடியாக்கள் வலைவீசி தேடிவருகின்றன.

தன்னுடைய யாகத்தின் வலிமையால் வேட்பாளரை தேர்தலில் வெற்றிபெற வைப்பதாகவும், அப்படி தன் ஆதரவு பெற்ற வேட்பாளர் வெற்றிப்பெறவில்லை என்றால், ஜீவசமாதி அடைவதாகவும் அறிவித்த கம்ப்யூட்டர் பாபாவை மீடியாக்கள் வலைவீசி தேடிவருகின்றன. நாடாளுமன்ற தேர்தலில் சர்ச்சைகளுக்கு பெயர்போன சாத்வி பிரக்யாசிங்கை பாஜக போபால் வேட்பாளராக அறிவிக்க, காங்கிரஸ் தன்னுடைய மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை களம் இறக்கியது.

Vairagyanand

சக பாபாவான சாத்வியை எதிர்க்கவும் தயாரான பஞ்சயதி நிரஞ்சனி அகாடாவைச் சேர்ந்த மகாமணடலேஸ்வரர் சுவாமி வைரக்யானந்த் என்ற பாபா, காங்கிரஸ் வேட்பாளர் திக் விஜய்சிங்கை தீவிரமாக ஆதரித்தார். எந்தளவு கொள்கை பிடிப்பு கொண்டவரென்றால், அவரின் வெற்றிக்காக கிலோகணக்கில் நெருப்பில் மிளகாய் போட்டு யாகம் செய்தார். எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற கணக்கில் திக் விஜய் சிங்கும் குடும்பத்துடன் யாகத்தில் கலந்துகொண்டார்.

Prayers Offered

புகையோடு சேர்ந்த மிளகாய் காரம் காரணமாக மந்திரத்தை தவறாக சொல்லிவிட்டாரோ என்னவோ, தேர்தல் முடிவு அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக வந்ததுவிட்டது. திக் விஜய் சிங்கைவிட 3 லட்சத்து 64ஆயிரம் வாக்குகளுக்கும் மேலாக பெற்று சாத்வீ வெற்றிபெறவும், நம்ம பாபாவுக்கு ஷாக் அடித்துவிட்டது. “நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னதைப் போய் சீரியஸா யாராச்சும் எடுத்துக்குவாங்களா, அதுவும் சாத்வீ நம்ம புள்ளையாச்சே” என எஸ்கேப் ஆவார் என்றுப் பார்த்தால், அதுதான் இல்லை. பாபாவை காணவில்லை. ஒருவேளை சொன்ன சொல்ல தவறாமல் ஜீவசமாதி அடைந்துவிட்டாரோ என்னவோ? பாபாவின் பெயர் வேறு வைராக்யானந்த். சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டைச்சாமின்னு எங்கேயும் கிளம்பிவிட்டாரோ என மீடியாக்கள் தேட ஆரம்பித்துவிட்டன. அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை டெப்பாசிட் இழக்க வைக்கவில்லை என்றால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக சொன்ன அமைச்சர் விஜய பாஸ்கர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.