சொன்னதை செய்ய தொடங்கிய யோகி ஆதித்யநாத்…..கலக்கத்தில் கலவரக்காரர்கள்…..

 

சொன்னதை செய்ய தொடங்கிய யோகி ஆதித்யநாத்…..கலக்கத்தில் கலவரக்காரர்கள்…..

பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இழப்பீடுகள் வசூல் செய்யப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி எச்சரிக்கை செய்து இருந்தார். தற்போது அவர் சொன்னப்படி, கலவரகாரர்களிடம் இழப்பீடு வசூலிக்கும் நடவடிக்கையில் அம்மாநில அரசு இறங்கி விட்டது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. சில பகுதிகளில் போராட்டங்கள் கலவரமாக வெடித்தது. உத்தரப் பிரதேசத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. அந்த மாநிலத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒரு கட்டத்தில் பெரும் கலவரமாக வெடித்தது. கார்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டனர். 

வன்முறை சம்பவம்

இதனையடுத்து கலவரகாரர்களுக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் எச்சரிக்கை விடுத்தார். எதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் வன்முறையில் ஈடுபட முடியாது. இது போன்ற சம்பவங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சொத்துக்களை சேதம் விளைவிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்து, ஏலம் விட்டு இழப்புகள் ஈடு செய்யப்படும் என கடந்த வாரம் அவர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

வன்முறையாக மாறிய ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், கடந்த வாரம் உத்தர பிரதேசத்தின் ராம்பூர் மற்றும் கோரக்பூரில் நடந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 60க்கும் மேற்பட்டவர்களை போலீசார் அடையாளம் கண்டு பிடித்தனர். இதனையடுத்து வன்முறை தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதற்கு இழப்பீடு வழங்கும்படி அவர்களுக்கு அம்மாவட்ட நிர்வாகங்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளன.