சொந்த தொகுதியில் கார் கண்ணாடியை உடைத்து விரட்டப்பட்ட ஓபிஎஸ் மகன்…வைரல் வீடியோ!
காரை வழிமறித்து இஸ்லாமிய அமைப்புகள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி காரை வழிமறித்து இஸ்லாமிய அமைப்புகள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி திடலில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெறவிருந்தது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள தேனி எம்பியும் ஓபிஎஸ் மகனுமான எம்.பி ரவீந்திரநாத் குமார் வருகை புரிந்தார்.
அப்போது அவரது காரை வழிமறித்த இஸ்லாமிய அமைப்பினை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததைக் கண்டித்து கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவரது காரை மறித்து தாக்குதல் நடத்தினர்.
இதில் காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் எம்.பி ரவீந்திரநாத் குமார் வந்த கார் அந்த அப்பகுதியில் நிறுத்தாமல் வேகமாக புறப்பட்டுச் சென்றது.
இதை தொடர்ந்து தாக்குதல் நடத்திய 50ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.