‘சொத்து தரமாட்டேன்’ என்று அடம்பிடித்த தாத்தா: பெண் சிசுவை உயிரோடு புதைத்த தந்தை !

 

‘சொத்து தரமாட்டேன்’ என்று அடம்பிடித்த தாத்தா: பெண் சிசுவை உயிரோடு புதைத்த  தந்தை !

இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

பெண் சிசுவை கொன்ற வழக்கில் குழந்தையின் தந்தையும் , தாத்தாவும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரத்தில் அரங்கேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சுந்தரேசபுரத்தை சேர்ந்தவர். வரதராஜன். இவருக்கும் சவுந்தர்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சவுந்தர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பெண் குழந்தை என்றதும் வரதராஜன் குழந்தையை பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். இதை தொடர்ந்து சவுந்தர்யாவை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். வீட்டிற்கு வந்த மூன்றாவது நாளில் குழந்தையை கொல்ல  நினைத்த வரதராஜன், தென்பெண்ணை ஆற்றில் புதைக்க சென்றுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டுள்ளனர். இதனால் பயந்துபோன சவுந்தர்யா தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மீண்டும் அவரை சமாதானம்  செய்து தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் வரதராஜன்.

crime

இதன்பின்னர் கடந்த 4 ஆம் தேதி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழ்நதையை கொண்டு போய் தென்பெண்ணை ஆற்றில் புதைத்துள்ளார் வரதராஜன். இதனால் அதிர்ச்சியடைந்த சவுந்தர்யா போலீஸில்  புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வரதராஜனை விசாரித்ததில் அவர் குழந்தையை கொன்றதை ஒப்புக்கொண்டார். பின்னர் குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. 

crime

மேலும் விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்தன. அதில் வரதராஜனின் தந்தை துரைக்கண்ணு  தன்னிடம் உள்ள 4 ஏக்கர் நிலத்தை ஆண்  குழந்தை  பிறந்தால் தான் தருவேன் என்று கூறி வந்ததால், எங்கே பெண் குழந்தையால் நிலம் கையைவிட்டுப் போய்விடப்போகிறது என்று பயந்து  குழந்தையை கொன்றுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில் குழந்தையை கொன்ற குற்றத்திற்காக வரதராஜன் மற்றும் குழந்தையை கொல்ல  தூண்டியதாகத் தாத்தா துரைக்கண்ணுவையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.