சொத்தில் பங்கு கேட்டதால் மகனை அடித்துக்கொன்ற தந்தை! 

 

சொத்தில் பங்கு கேட்டதால் மகனை அடித்துக்கொன்ற தந்தை! 

சொத்து பிரச்னையால் ஏற்பட்ட மோதலில் மகனைக் அடித்துக் கொன்றுவிட்டு, உயிரிழந்ததாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சொத்து பிரச்னையால் ஏற்பட்ட மோதலில் மகனைக் அடித்துக் கொன்றுவிட்டு, உயிரிழந்ததாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெரியகாப்பாங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்தார். மரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்ததில் அவர் உயிரிழந்ததாக தந்தை பரமசிவம் தெரிவித்தார். இதுதொடர்பாக புகாரின்பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், மோப்ப நாய் அர்ஜுனை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அங்கு மோப்பம் பிடித்த அர்ஜுன்‌, சிவக்குமாரின் தந்தையை சுற்றிச் சுற்றி வந்தது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.விசாரணை தீவிரப்படுத்தப்பட்டதை அடுத்து, மகன் சிவக்குமாரை அடித்துக் கொலை செய்ததை பரமசிவம் ஒப்புக் கொண்டுள்ளார். மதுவுக்கு அடிமையான சிவக்குமார், சொத்தை பிரித்துத் தரக்கோரி பிரச்னை செய்ததால் தாக்கியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பரமசிவத்தை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.