சொகுசு பேருந்தில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் செய்த அநாகரீகமான செயல்! முகம்சுழித்த பயணிகள்!! 

 

சொகுசு பேருந்தில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் செய்த அநாகரீகமான செயல்! முகம்சுழித்த பயணிகள்!! 

சொகுசு பேருந்து ஒன்றில் ஏறிய பெண் பயணி ஒருவர் அரைகுறை ஆடையுடன் அநாகரீமான முறையில் நடந்துகொண்டது சக பயணிகளை முகம் சுழிக்கவைத்தது. 

சென்னையிலிருந்து புதுச்சேரி சென்ற படுக்கை வசதிக்கொண்ட பேருந்தில் ஏறிய பெண் ஒருவர் அரைகுறை ஆடையுடன்  மது அருந்திக்கொண்டிருந்தார். அதனைப்பார்த்த சக பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே பேருந்தை நிறுத்தி அந்த பெண்ணிடம் ஓட்டுநரும், நடத்துனரும் பேச்சுவார்த்தை நடத்தி எச்சரித்தனர். ஆனால் போதையில் தடுமாறிக்கொண்டிருந்த அந்த பெண் மீண்டும் சத்தம் போட்டுக் கொண்டே சென்றுள்ளார்.

மது

உடனே பேருந்திலிருந்த பயணிகள் அந்த பெண்ணை கீழிறக்க கூறினர். ஆனால் இரவு நேரம் என்பதால் தனியாக விடவேண்டாம் எனக்கூறி ஓட்டுநர் அந்த பெண்ணை கீழே இறக்கிவிட மறுத்துவிட்டார்.  மதுபோதையில் இருந்த அந்த பெண் பாண்டிச்சேரி செல்லும் வரை மீண்டும் மது அருந்திக்கொண்டு சத்தம் போட்டப்படியே பயணித்தார்.