சேலம் கல்லூரியில் பாலியல் புகார்… போராட்டத்தால் அலர்ஜியில் எடப்பாடி பழனிசாமி..!

 

சேலம் கல்லூரியில் பாலியல் புகார்… போராட்டத்தால் அலர்ஜியில் எடப்பாடி பழனிசாமி..!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போராட்டம் என்றாலே அலர்ஜி. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக தற்காலிக பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு போராட்டம் என்றாலே அலர்ஜி. சேலம்  மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக தற்காலிக பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 

 போராட்டத்தை ஒடுக்க அவசரப்பட்ட நிர்வாகம், தவறான தேதியை போட்டு  நோட்டீஸ் கொடுத்து மாட்டிக் கொண்டது.  இதுஒருபுறம் இருக்க, உறுப்பு கல்லூரியில் இருந்த ஒரு பெண் பணியாளருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு இருந்து வந்தது. இதை தாங்க முடியாத அந்த பெண், பெரியார் யுனிவர்சிட்டிக்கு என்னை மாற்றி விடுங்கள் என கோரிக்கை வைத்தார்.

எல்லாம் சரியாக  முடியும்  நேரத்தில், யுனிவர்சிட்டியில் தற்காலிகமாக வேலை பார்க்கிற அந்த பெண்ணோட தாயாரும், போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். இதை  காரணமாகக் கூறி யாரையும் இடமாற்றம் செய்ய முடியாது என திடீரென  கைவிரித்து விட்டார்கள். நிர்வாகத்துக்கு எதிராக இருந்தால் எல்லாமே இப்படித்தான் என சொல்லாமல்  சொல்கிறார்கள் என பற்றி புகைந்து வருகிறது. ஜனநாயக முறையில் போராடினால் கூட தப்பா என தற்காலிக பணியாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.