சேரனை திட்டம்போட்டு பழிவாங்க நினைக்கும் மீரா மிதுன்! லீக்கான ஆடியோ பதிவு உள்ளே.. 

 

சேரனை திட்டம்போட்டு பழிவாங்க நினைக்கும் மீரா மிதுன்! லீக்கான ஆடியோ பதிவு உள்ளே.. 

மீரா மிதுன், சேனை பழிவாங்கத் தனது நண்பரோடு திட்டம்போட்டு பேசிய ஆடியோ லீக்காகியுள்ளது. 

சென்னை: மீரா மிதுன், சேனை பழிவாங்கத் தனது நண்பரோடு திட்டம்போட்டு பேசிய ஆடியோ லீக்காகியுள்ளது. 
 
பிக்பாஸ் சீசன் 3யில் 16வது போட்டியாளராகப் பங்கேற்றார் மீரா மிதுன். இவர் நுழைந்தது சக போட்டியாளர்களான அபிராமி மற்றும் சாக்ஷி ஆகியோருக்கு பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி இவர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளதால் பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று விசாரித்து வந்தனர். பிறகு பிக்பாஸ் வீட்டில் பலரிடம் பிரச்சனை செய்து வந்த மீரா மிதுன் ஒரு வழியாகச் சமீபத்தில் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வெளியேறினார். 

இது ஒரு பக்கம் இருக்க இவர் வெளியேற மிக முக்கிய காரணம் சேரன், தன்னை தப்பான இடத்தில் தொட்டு தள்ளிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு வைத்தார். ஆனால் அவர் சொல்வது போல் எதுவுமே நடக்கவில்லை என்று கமல்ஹாசன் குறும்படம் போட்டு காண்பித்து மீரா முத்திரையை கிழித்தார். 

இந்த நிலையில் அதை இன்னும் மனசில் வைத்துள்ள மீரா, தனது நண்பருடன் சேர்ந்து அவரை பழிவாங்க நினைத்து திட்டம்போட்டுள்ளார். அப்போது பேசிய ஆடியோ லீசுக்காகியுள்ளது. அதில் அவர் கூறியதாவது, ‘எ ன்னை ஜோ பிராடு பிராடு என்று பல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளான். நீ இப்போ எனக்கு சப்போர்ட் பண்ணுறமாதிரி நான் சொல்லுறதை செய்,சேரன் என் பின்னாடி நின்னு என்னை கட்டியணைத்து தள்ளுற மாதிரி தான் வீடியோவில் இருக்கு. 

அவர் முன்னாடி கை வைத்து என்ன பண்ணாருன்னு யாருக்கும் தெரியாது. ஒரு சாதாரண பொண்ணுக்கு நீதி கிடையாதா? இதே ஒரு டைரக்டர் பண்ணினா சரியா என்று முழுக்க முழுக்க எனக்கு சப்போர்ட் பண்ணி எழுது.  நாளை மாலை வரை நேரம் இருக்கிறது.  இப்போதே எல்லாரும் எவிக்ட்னு போட்டுட்டாங்க மச்சி வேலை செய்யத் தொடங்குங்கள் ‘ என்று அதில் பேசியுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் மீராவைச் சரமாரியாகக் கேள்வி கேட்டு வருகின்றனர்.