சேத்துப்பட்டு சம்பவம்: தேன்மொழி வீட்டிற்கு பெண் கேட்டு சென்ற சுரேந்தர்? விசாரணையில் வெளியான பகீர் தகவல்!?

 

சேத்துப்பட்டு சம்பவம்: தேன்மொழி வீட்டிற்கு பெண் கேட்டு சென்ற சுரேந்தர்? விசாரணையில் வெளியான பகீர் தகவல்!?

சேத்துப்பட்டில் நடந்த கொலை முயற்சி சம்பவத்தில்  ஈடுபட்ட சுரேந்தர், தேன்மொழியை அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சேத்துப்பட்டில் நடந்த கொலை முயற்சி சம்பவத்தில்  ஈடுபட்ட சுரேந்தர், தேன்மொழியை அவரது வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரோட்டைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர் விடுதி ஒன்றில் தங்கியபடி சென்னையில் கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.  இவரை ஈரோட்டை சேர்ந்த சுரேந்தர் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

chetpat

இதையடுத்து நேற்று சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில்  சுரேந்தருக்கும்  தேன்மொழிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேந்தர் தேன்மொழியை குத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து தானும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயன்றார். இதில் படுகாயம் அடைந்த இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

surendar

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையில், தேன்மொழி சுரேந்தர் இருவரும் காதலித்துள்ளனர். இதனால்  சுரேந்தர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, நண்பர்களுடன் சென்று தேன்மொழி வீட்டிற்கு சென்று அவரை பெண் கேட்டுள்ளார். சாதியை காரணம் சொல்லி  தேன்மொழியின் தந்தை அவரை திட்டி அனுப்பியதாகத் தெரிகிறது. சுரேந்தருடன் பேசக் கூடாது எனப் பெற்றோர் தேன்மொழியிடம் சத்தியம் வாங்கியுள்ளனர்.  இதையடுத்து தேன்மொழியும் சுரேந்தருடன் பேசுவதைத் தவிர்த்து வந்துள்ளார். இதனால் கடந்த ஆறு மாத  காலமாக சுரேந்தர்  மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தேன்மொழி மீது இருந்த ஆத்திரத்தில் அவர் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து கருத்து கூறியுள்ள சுரேந்தரின் தந்தை, சென்னைக்கு திருமணத்திற்குச் செல்வதாகக் கூறி விட்டுச் சென்றான். எனக்கு இந்த காதல் விவகாரம் பற்றியெல்லாம் தெரியாது. விஷயத்தை கேள்விப்பட்டுவிட்டு இதயமே நொறுங்கிப்போய் விட்டது ‘ என்று கண்ணீர்  மல்க கூறியுள்ளார்.  இது தொடர்பாகத் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.