செவ்வாய் கிரகத்திற்கு நம்ம போக முடியலனா என்ன நம்ம பெயர் போகட்டும்! உடனடியாக அப்ளை செய்யவும்!!

 

செவ்வாய் கிரகத்திற்கு நம்ம போக முடியலனா என்ன நம்ம பெயர் போகட்டும்! உடனடியாக அப்ளை செய்யவும்!!

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு செல்லவிரும்புவர்களின் பெயர்களை அனுப்புமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு செல்லவிரும்புவர்களின் பெயர்களை அனுப்புமாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நாசாவின் கனவு திட்டமான செவ்வாயில் மனிதர்களை குடியமர்த்தும் திட்டத்திற்காக கடுமையாக பல ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு ரோவர்  ஒன்றை விண்வெளிக்கு அனுப்பவுள்ளது. அதனுடன் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோ ஒன்றையும் நாசா அனுப்ப திட்டமிட்டுட்டுள்ளது. அந்த ரோவருடன் மைக்ரோ சிப்பில் செவ்வாய் கிரகம் போக விரும்புகிறவர்களின் பெயரை எழுதி அனுப்பவும் நாசா திட்டமிட்டுள்ளது. அதன்படி உங்கள் பெயர் செவ்வாய்க்கு செல்ல வேண்டும் என விரும்பினால் நாசாவின் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். ரோவரோடு அனுப்பப்படும் மைக்ரோ சிப்பில் நானோ எழுத்துக்களால் பதிவு செய்பவர்கள் பெயர் பொறிக்கப்பட்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஏராளமான மக்கள் தங்கள் பெயரை இதில் பதிவு செய்து வருகிறார்கள். பெயரை பதிவு செய்ய கடைசி தேதி செப்டம்பர் 30 என நாசா அறிவித்துள்ளது.