செல்வவளம் மற்றும் பணவசியம் தரும் மந்திரம்

 

செல்வவளம் மற்றும் பணவசியம் தரும் மந்திரம்

அகத்தியர்:  சகல செல்வங்களும் தரும் அகத்தியரின் 108 போற்றிகளை இந்த பதிவில் பார்போம். 

 

பொதிகைமலையில் 18 சித்தர்களில் முதன்மையான சித்தராக கருதப்படுபவர் அகத்தியர். இவர், வேத வித்துக்களாக சப்த ரிஷிகளில் ஒருவராக கருதப்படுகிறார். அகத்தியருக்கு பல வேத மந்திரங்கள் இயற்றிய பெருமை உண்டு.

 

 

இவரே அகத்தியம் எனும் முதல் தமிழ் இலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும்.

 

ஒரு முறை பொதிகைமலையில் குற்றாலத்தை அகத்தியர் அடைந்தார். அங்கு அவரை சுந்தரானந்தர், யூகிமுனி, கொங்கணவர் ஆகியோர் அன்புடன் மனம் மகிழ வரவேற்று சிறப்பித்தனர்.அப்போது, அவர்கள் தங்களுக்கு, சிவன், பார்வதியின் திருமணத்தை காண வேண்டும் என்ற ஆசையை அகத்தியர் முன்பு வெளிப்படுத்தினர். இதைக் கேட்ட அகத்தியர் அனைவருக்கும் சிவ பெருமானின் திருமணத்தை காண செய்தார்.

 

 

சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசைக்கு பயனப்பட்டு அதை சமன் செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் போற்றப்படுகிறார்.இதனால்தான் பொதிகைமலை அகத்தியர் உருவத்தில் அமைந்துள்ளதாக ஆன்மீக அன்பர்கள் கூறுகிறார்கள்.

 

அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

 

 

இத்தகைய பெருமைகள் மிக்க அகத்தியரை தினமும் காலை வேலையில் வீட்டில் விளக்கு ஏற்றி கீழ்கண்ட அகத்தியர்108 போற்றி  திருமந்திரத்தினை பாராயணம் செய்ய வேண்டியவை அனைத்தும் வேண்டியபடி கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

 

அகத்தியர்108 போற்றி:

 

ஓம் அகத்தீசப் பெருமானே போற்றி 

ஓம் அகிலம் போற்றும் அறிவுக்கடலே போற்றி

ஓம் அட்டமா சித்துகள் பெற்றவரே போற்றி 

ஓம் அகத்தியர் மலை மீது அமர்ந்தவரே போற்றி 

ஓம் தமிழ் முனியே போற்றி 

ஓம் இறைவனிடம் தமிழ் கற்றவரே போற்றி 

ஓம் தமிழின் முதல் தொண்டரே போற்றி 

ஓம் தமிழின் முதல் முனைவரே போற்றி 

ஓம் பொதிகைமலை மாமுனியே போற்றி 

ஓம் தவ சீலரே போற்றி 

ஓம் சிவ சீடரே போற்றி 

ஓம் கும்ப சம்பவரே போற்றி 

ஓம் நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 

ஓம் தன்வந்திரியிடம் மருத்துவம் பயின்றவரே போற்றி 

ஓம் தேரையருக்கு மருத்துவம் பயிற்றுவித்தவரே போற்றி

ஓம் காமேஸ்வரி மந்திர உபதேசம் பெற்றவரே போற்றி 

ஓம் வயதில் எல்லையில்லா சித்தரே போற்றி 

ஓம் குருவுக்கெல்லாம் மகா குருவே போற்றி 

ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே போற்றி 

ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 

ஓம் நவராத்திரி பூஜை கல்பம் இயற்றியவரே போற்றி 

ஓம் நயனவிதி என்ற கண் மருத்துவ நூல் எழுதியவரே போற்றி

ஓம் விட ஆருட நூல் தந்தவரே போற்றி 

ஓம் மூலிகை அகராதி அருளியவரே போற்றி 

ஓம் அகத்தியம் தந்த அருளாளரே போற்றி 

ஓம் அகத்தியர் காவியம் தந்தவரே போற்றி

ஓம் அகத்தியர் வெண்பா அருளியவரே போற்றி 

ஓம் அகத்திய நாடி அருளியவரே போற்றி 

ஓம் வைத்திய சிந்தாமணி தந்தவரே போற்றி 

ஓம் அகத்தியர் பஷிணி அருளாளரே போற்றி 

ஓம் அகத்திய சூத்திரம் படைத்தவரே போற்றி 

ஓம் அகத்திய ஞானம் தந்தவரே போற்றி 

ஓம் அகத்திய சம்ஹிதை அருளியவரே போற்றி 

ஓம் ஐந்து சாஸ்திரம் தந்தவரே போற்றி 

ஓம் கிரியை யோகம் படைத்தவரே போற்றி 

ஓம் ஆறெழுத்து அந்தாதி அருளியவரே போற்றி 

ஓம் வைத்திய கௌமி எழுதியவரே போற்றி 

ஓம் வைத்திய ரத்னாகரம் எழுதியவரே போற்றி 

ஓம் வைத்திய கண்ணாடி தந்தவரே போற்றி 

ஓம் வைத்திய ரத்ன சுருக்கம் அளித்தவரே போற்றி 40

ஓம் வாகட வெண்பா அருளியவரே போற்றி 

ஓம் சிவா சாலம் தந்தவரே போற்றி 

ஓம் சக்தி சாலம் தந்தவரே போற்றி 

ஓம் சண்முக சாலம் தந்தவரே போற்றி 

ஓம் சமரசநிலை ஞானம் போதிதவரே போற்றி 

ஓம் சக்தி சூத்திரம் சமைத்தவரே போற்றி 

ஓம் இராமனுக்கு சிவகீதை அருளியவரே போற்றி 

ஓம் ஆதித்ய ஹிருதயம் அருளியவரே போற்றி 

ஓம் வாதாபியை வதம் செய்தவரே போற்றி

ஓம் சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி 

ஓம் இடும்பனை காவடி எடுக்க வைத்தவரே போற்றி 

ஓம் தொல் காப்பியரின் குருவே போற்றி

ஓம் கடல் நீரைக் குடித்து வற்றச் செய்தவரே போற்றி 

ஓம் நீரின் மேலே தவமிருந்தவரே போற்றி 

ஓம் விந்திய மலையின் அகந்தையடக்கியவரே போற்றி 

ஓம் அசுராசுரர்களை அழித்தவரே போற்றி 

ஓம் காவிரியைப் பெருக்கியவரே போற்றி 

ஓம் தாமிரபரணியை உருவாக்கியவரே போற்றி 

ஓம் ராவணனை இசையால் வென்றவரே போற்றி 

ஓம் அகஸ்தீஸ்வரம் அமைத்தவரே போற்றி 

ஓம் தேவாதி தேவர்களை காத்தவரே போற்றி 

ஓம் சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி 

ஓம் சித்த வைத்திய சிகரமே போற்றி 

ஓம் அகத்திய பூஜாவிதி தொகுத்தவரே போற்றி 

ஓம் நான்கு யுகங்களையும் கடந்தவரே போற்றி 

ஓம் முத்தமிழால் உலகை ஆண்டவரே போற்றி 

ஓம் தமிழ்ச் சங்கங்களின் தலைவனே போற்றி 

ஓம் சிவசூரிய வழிபாட்டைத் துவக்கியவரே போற்றி

ஓம் கும்பத்தி லுதித்த குறுமுனியே போற்றி 

ஓம் வடதென் திசையை சமப்படுத்தியவரே போற்றி 

ஓம் உலோபமுத்திரையின் மணாளா போற்றி 

ஓம் அம்பையில் கோயில் கொண்டவரே போற்றி 

ஓம் அரும் மருந்துகள் அறிந்தவரே போற்றி 

ஓம் அனைத்தும் கற்றுத் தெளிந்தவரே போற்றி 

ஓம் முக்காலமும் உணர்ந்தவரே போற்றி 

ஓம் முத்தமிழும் வளர்த்தவரே போற்றி 

ஓம் ஆஷா சுவாஸினி மைந்தரே போற்றி 

ஓம் நெல்மணிகளின் தலைவனே போற்றி 

ஓம் சிவன் அம்சமே போற்றி 

ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி

ஓம் சர்வ சக்திகளும் தருபவரே போற்றி 

ஓம் சகல கலைகளும் சித்தியாக அருள்பவரே போற்றி 

ஓம் பிறவா வரம் தரும் பெருமானே போற்றி 

ஓம் தேவி உபாசகரே போற்றி 

ஓம் இசையிலும் கவிதையிலும் மேன்மை தருபவரே போற்றி 

ஓம் கல்வித் தடை நீக்குபவரே போற்றி 

ஓம் புத பகவானின் தோஷம் நீக்குபவரே போற்றி 

ஓம் முன் தீவினைப் பாவங்கள் தீர்ப்பவரே போற்றி 

ஓம் பேரும் புகழும் மதிப்பும் உண்டாக அருள்பவரே போற்றி 

ஓம் பூர்விக சொத்துக்கள் கிடைக்க அருள்பவரே போற்றி 

ஓம் சகலவித நோய்களையும் தீர்ப்பவரே போற்றி 

ஓம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவச் செய்பவரே போற்றி 

ஓம் பித்ரு சாபம் நீக்கி ஆசி பெற அருள்பவரே போற்றி 

ஓம் சத்ருக்களின் மனம் மாற்றி அன்புரச் செய்பவரே போற்றி 

ஓம் சித்திகள் பெற்று உயரச் செய்பவரே போற்றி 

ஓம் நல் குருவாகி மனதார வாழ்த்து பவரே போற்றி 

ஓம் அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால் போற்றி 

ஓம் அகண்டம் பரி பூரணத்தின் அருளே போற்றி 

ஓம் மண்டலஞ் சூழ் இரவிமதி சுடரே போற்றி 

ஓம் மதுரத் தமிழோதும் அகத்தீசரே போற்றி 

ஓம் எண்திசையும் புகழும் என் குருவே போற்றி

ஓம் இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி 

ஓம் குண்டலியில் அமர்ந்தருளும் குகனே போற்றி 

ஓம் மேன்மை கொள் சைவநீதி விளங்க செய்பவரே போற்றி

ஓம் கும்பேஸ்வரன் கோயில் முக்தி அடைந்தவரே போற்றி 

ஓம் குருவாய் நின்று இன்றும் ஆசிகள் அளிப்பவரே போற்றி 

ஓம் குருமுனியின் திருவடிகள் எப்போதும் போற்றி 

ஓம் இன்னல்கள் நீக்கி இன்பம் தரும் அகத்தீசப் பெருமானே 

உமது திருவடிகள் சரணம் போற்றி…. போற்றியே ….. 

 

 

அகத்தியர் மூல மந்திரம் :

 

“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

 

ஸ்ரீஅகத்திய மகரிஷியின் காயத்ரி :

 

“ஓம் அகதீஸ்வராய விதமஹே

பொதிகை சஞ்சராய தீமஹி

தந்நோ ஞானகுரு ப்ரசோதயாத்”

 

அகத்தியர் மூல மந்திரம் 2 :

 

“ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே 

சாப பாவ விமோட்சனம் 

ரோக அகங்கார துர் விமோட்சனம் 

சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம் 

சற்குருவே ஓம் அகஸ்திய 

கிரந்த கர்த்தாய நம:”

 

 

அகத்தியர் பதினாறு போற்றிகள்:

 

1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!

2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!

3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!

4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!

5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!

6. சித்த வைத்திய சிகரமே போற்றி!

7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!

8. இசைஞான ஜோதியே போற்றி!

9. உலோப முத்திரையின் பதியே போற்றி!

10. காவேரி தந்த கருணையே போற்றி!

11. அகத்தியம் தந்த அருளே போற்றி!

12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!

13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!

14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!

15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!

16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!

 

 

அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்க 

மந்திரம்:

 

ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே

என் குருவே வா வா வரம் அருள்க

அருள் தருக அடியேன் தொழுதேன்.