செல்போன் பேசிக்கொண்டே வந்ததால் விபரீதம்! மின்சார ரயில் மோதி உயிரிழந்த ஐடி பெண் ஊழியர்!! 

 

செல்போன் பேசிக்கொண்டே வந்ததால் விபரீதம்! மின்சார ரயில் மோதி உயிரிழந்த ஐடி பெண் ஊழியர்!! 

தாம்பரம் அருகே ஐடி பெண் ஊழியர் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தாம்பரம் அருகே ஐடி பெண் ஊழியர் மின்சார ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுமித்ரா(25) சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் நண்பர்களுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில்  பணி முடித்து இன்று சொந்த ஊரான திருப்பூர் மாவட்டத்திற்கு செல்ல இருந்த நிலையில் தான் தங்கியிருந்த அறையில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த துணிமணிகளை எடுத்துக்கொண்டு செல்ல தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது செல்போன் பேசிக் கொண்டே தண்டவாளத்தை கடந்ததாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.  

ரயில் விபத்து

சுமித்ரா தண்டவாளத்தை கடக்கும்போது செங்கல்பட்டில் இருந்து வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். சுமித்ராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் சம்பவ உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.