செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்! அமைச்சர் ஆவேசம்… 

 

செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்! அமைச்சர் ஆவேசம்… 

செல்போனை கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

செல்போனை கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும் போல் உள்ளது என அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பாஸ்கரன், “செல்போன் நல்ல நோக்கத்திற்காக கண்டுபிடிக்கப்பட்டாலும், செல்போனால் பல இளைஞர்கள் கெட்ட வழிக்கு செல்கின்றனர். செல்போனால் மாணவர்களின் கல்வியை பாதிக்கிறது. செல்போனை கண்டிபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும் போல் உள்ளது. எனவே இலவசமாக அரசு வழங்கும் மடிக்கணினியை மாணவர்கள் நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்” எனக் கூறினார். 

மார்ட்டின் கூப்பர்

அமைச்சர் பாஸ்கரன் மிதிக்க வேண்டும் எனக்கூறிய நபர் யார் தெரியுமா? அதாவது செல்போனை கண்டுபிடிச்சவர் யார் தெரியுமா? அவர் தான் மோட்டாராலோ நிறுவனத்தின் முன்னாள் ஆய்வாளர் மார்ட்டின் கூப்பர். இவர்தான் 1973 ஆம் ஆண்டுசெல்போனைக் கண்டுபிடித்தார்.