செல்போனில் தொடர் பேச்சு: 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய்-ஆய்வில் அதிர்ச்சி

 

செல்போனில் தொடர் பேச்சு: 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய்-ஆய்வில் அதிர்ச்சி

செல்போனில் தொடர்ந்து பேசினால், 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: செல்போனில் தொடர்ந்து பேசினால், 10 ஆண்டுக்குள் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

செல்போனில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உலகம் முழுவதும் பல்வேறு மின்கதிர்வீச்சு பேராசிரியர்கள், நிபுணர்கள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த அறிக்கையின் படி, செல்போனில் ஒருவர் தொடர்ந்து 20 முதல் 30 நிமிடங்கள் பேசினால் 10 ஆண்டுகளில் மூளை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் எனவும், செல்போன் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தற்போது வரை நடந்த ஆய்வில் மூளை புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து மக்களிடம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரங்கள், வை-பை போன்றவை 24 மணி நேரமும் வெளியேற்றும் கதிர்வீச்சுகள் மனிதர்களை மிகவும் பாதிக்கிறது என தெரிவித்துள்ள அந்த அறிக்கை, செல்போனை அருகில் வைத்து தூங்குவதாலும், வாகனங்களில் போகும்போது பயன்படுத்துவதாலும் கதிர்வீச்சினால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.