செல்போனில் அடிக்கடி சிரித்து பேசும் தாய்: தற்கொலை செய்து கொண்ட மகன்!?

 

செல்போனில் அடிக்கடி சிரித்து பேசும் தாய்: தற்கொலை செய்து கொண்ட மகன்!?

தாய் நீண்ட நேரம் செல்போன் பேசி வந்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரமேரூர் : தாய் நீண்ட நேரம் செல்போன் பேசி வந்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திரமேரூர் வாழைத்தோட்ட தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 
சக்திவேல் என்ற மகனும் உள்ளனர்.லோகநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நல குறைவால் இறந்துள்ளார். 

கணவர் லோகநாதன் இறந்த பிறகு, சித்ரா அப்பகுதியிலிருந்த தனையர் நிறுவனத்தில் வேலைக்கு சென்று வந்துள்ளார். சித்ரா வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு, நீண்ட நேரம் செல்போனில் யாரிடமோ பேசி வந்துள்ளார். இதனால் தாய்  சித்ராவை சக்திவேல் கண்டித்துள்ளார். இதனால் தாய்க்கும் மகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

cell

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சித்ரா வழக்கம்போல் செல்போனில் பேசி கொண்டிருப்பதைப் பார்த்த சக்திவேல் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் இருவருக்கும் சண்டை முற்றியுள்ளது. இதை தொடர்ந்து சித்ரா வெளியே சென்றுள்ளார். 

முன்னதாக தாயுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விரக்தியிலிருந்த சக்திவேல், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த சக்திவேலின் தந்தை வழி உறவினர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உத்திரமேரூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

suicide

இது குறித்து கூறும் சக்திவேலின் உறவினர்கள், சக்திவேலின் தாய் வேலைபார்க்கும் இடத்தில் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகவும், அதனால் நேரம் காலம் தெரியாமல் செல்போன் பேசி வந்துள்ளார். அதனால் ஏற்பட்ட பிரச்னையில் தான் சக்திவேல் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவரது தற்கொலைக்குத் தாய் சித்ரா தான் காரணம்  என்று குற்றச்சாட்டியுள்ளனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.