செல்போனால் விபரீதம்… போதையில் ஒருவர் அடித்துக் கொலை!

 

செல்போனால் விபரீதம்… போதையில் ஒருவர் அடித்துக் கொலை!

குடி போதையில் கீழே கிடந்த செல்போனை எடுத்து வைத்தவரை அடித்துக் கொன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் நல்லம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் செந்தில் என்பவர் தன்னுடைய நண்பர்கள் வேல்முருகன், சதீஷ், கண்ணன் ஆகியோருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி (48) என்பவர் மது அருந்த வந்துள்ளார். கீழே ஒரு செல்போன் இருந்ததைக் கவனித்த அவர் அதை எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

குடி போதையில் கீழே கிடந்த செல்போனை எடுத்து வைத்தவரை அடித்துக் கொன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் நல்லம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை பாரில் செந்தில் என்பவர் தன்னுடைய நண்பர்கள் வேல்முருகன், சதீஷ், கண்ணன் ஆகியோருடன் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த முத்துசாமி (48) என்பவர் மது அருந்த வந்துள்ளார். கீழே ஒரு செல்போன் இருந்ததைக் கவனித்த அவர் அதை எடுத்து தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
செந்தில் உள்ளிட்டோர் மது அருந்து முடித்துவிட்டு வெளியே செல்ல தயாரானபோது, மொபைல் போன் காணாமல் போயிருந்தது தெரிந்தது. உடனே, நண்பர்கள் செந்திலின் மொபைல் போனுக்கு அழைப்பு மேற்கொண்டனர். அது அவர்கள் அருகில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த முத்துசாமி பாக்கெட்டில் இருப்பது தெரிந்தது. உடனே, முத்துசாமியிடம் சண்டைக்குச் சென்றுள்ளனர் செந்தில் மற்றும் அவரது நண்பர்கள்.
முத்துசாமியோ, கீழே கிடந்ததை எடுத்துவைத்தேன் என்றும், திருடுவதாக இருந்தால் அதை எப்போதோ சுவிட்ச் ஆஃப் செய்திருக்க மாட்டானா என்றும் கேட்டுள்ளார். ஆனால், போதையிலிருந்த நால்வருக்கும் எதுவும் விளங்கவில்லை. செல்போனை திருடுவாயா என்று கேட்டபடி முத்துசாமியை தாக்கியுள்ளனர். பலமாக தாக்கியதில் முத்துசாமி நிலைதடுமாறி தரையில் விழுந்து இறந்தார். 
முத்துசாமி இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் செந்தில், கண்ணன் தப்பிவிட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார் சதீஷ், வேல்முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.