செல்பி எடுக்க வந்த நடிகை கஸ்தூரி- கடுப்பாகி திட்டிய கார்த்தி

 

செல்பி எடுக்க வந்த நடிகை கஸ்தூரி- கடுப்பாகி திட்டிய கார்த்தி

செல்பி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது என்று நடிகர் கார்த்தி கடுமையாக நடிகை கஸ்தூரி மேடையில் திட்டியுள்ளார்,

சென்னை: செல்பி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது என்று நடிகர் கார்த்தி கடுமையாக நடிகை கஸ்தூரி மேடையில் திட்டியுள்ளார்,

கே.சி.சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள ‘ஜூலை காற்றில்’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், விழாவைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, நடிகர் கார்த்தியை பேச அழைத்தார். அப்போது, கையில் செல்போனை வைத்து கார்த்தி இங்க வாங்களேன்.. நம்ம ஒரு செல்பி எடுத்துக்கலாம் என்றார். உங்க அப்பா இல்ல.. அதனால அவசரமா ஒரு செல்பி எடுத்துக்கலாம் என கஸ்தூரி கிண்டலாகப் பேசியுள்ளார்.

இதனால் கடுப்பான நடிகர் கார்த்தி, இது தேவையில்லாத ஒரு விஷயம் என முகத்தைத் திருப்பிக் கொண்டு பேச ஆரம்பித்தார். கார்த்தி பேசுகையில், ‘செல்பி என்பதற்கே மரியாதை இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்கறது இல்ல. முகத்துக்கு முன்னால் கேமராவை கொண்டு வந்து முன்னால் ஒரு ப்ளாஷ் பின்னால் ஒரு ப்ளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆகுறது. ஒரு விவஸ்தையே கிடையாது என்றார்.

ஒரு வார்த்தை கேட்டுட்டு போட்டோ எடுக்கணும் என்ற மரியாதை கூட தெரியாத அளவுக்கு ஆயிட்டோமா என வருத்தமாக உள்ளது என்றார். இது மாதிரி ஏதேனும் மேடைகளில் சொன்னால் தான் உண்டு, வேரு எங்கும் சொல்ல முடியாது’ என்றார். பின் படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.