செல்பி எடுக்கும் போது நடந்த விபரீதம்: ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்!

 

செல்பி எடுக்கும் போது  நடந்த விபரீதம்: ஜெகன் மோகன் ரெட்டி மீது தாக்குதல்!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தாக்கப்பட்ட சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் இன்று அவர் விசாகப்பட்டினத்தில் இருந்து ஹைதராபாத் செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார். ஜெகன் மோகன் ரெட்டி சிலருடன் செல்பி எடுத்து கொண்டிருக்கும் போது அப்போது அங்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெகன் மோகன் ரெட்டியை இடதுபுற தோள் பட்டையில் தாக்கினார். இதனால் ஜெகன் ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர்  சுப்பிரமணி என்பது தெரியவந்தது.

jagan

இந்நிலையில் போலீசார் தரப்போ,  தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக  அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.