செல்ஃபி விவகாரம்: ரசிகருக்கு செல்போன் பரிசளித்த சிவக்குமார்!

 

செல்ஃபி விவகாரம்: ரசிகருக்கு செல்போன் பரிசளித்த சிவக்குமார்!

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் சர்ச்சையானதையடுத்து, அந்த ரசிகருக்கு புதிய செல்போனை சிவக்குமார் பரிசளித்துள்ளார்.

சென்னை: செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் சர்ச்சையானதையடுத்து, அந்த ரசிகருக்கு புதிய செல்போனை சிவக்குமார் பரிசளித்துள்ளார்.

சமீபத்தில் மதுரையில் நடந்த தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் பங்கேற்றார். அப்போது தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள முயற்சித்த இளைஞரின் செல்போனை ஆத்திரத்தில் தட்டிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த சிவக்குமார், பின்னர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரினார். இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டதில் தனது செல்போன் உடைந்துவிட்டது, அவர் புதிய செல்போன் வாங்கித் தருவதாக கூறியுள்ளார். அப்படி புதிய செல்போன் கிடைத்தால் மகிழ்ச்சி தான் என இளைஞர் ராகுல் தெரிவித்தார்.

தற்போது அந்த இளைஞருக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதிய செல்போன் நடிகர் சிவக்குமார் சார்பாக வழங்கப்பட்டது. புதிய செல்போனை பெற்றுக் கொண்ட ராகுல் நடிகர் சிவக்குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்