“செருப்பு வைக்கும் ஸ்டான்டில் அம்பேத்கர் படமா?”.. ஒரே ட்வீட்டில் முற்றுப்புள்ளி வைத்த வானதி ஸ்ரீனிவாசன்!
பா.ஜ.க மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசனும் டேப்லெட்டில் அம்பேத்கர் படத்தை வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் பலர் அவரது புகைப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதே போல பா.ஜ.க மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசனும் டேப்லெட்டில் அம்பேத்கர் படத்தை வைத்து மரியாதை செலுத்தினார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதாவது, வானதி ஸ்ரீனிவாசன் செருப்பு வைக்கும் ஸ்டாண்டில் தான் அம்பேத்கரின் புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தினார் என்று இணையதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன.
இதற்கு வானதி ஸ்ரீனிவாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் நேற்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் படத்தை அவமரியாதை செய்துவிட்டேன் என சமூக ஊடகங்களில் ஒரு சிலர் குறிப்பிட்டதாக அறிந்தேன்…. அது தவறு…என் வீட்டின் முன்பகுதியில் தான் ஓவ்வொரு நாளும் பட்டியலின பெண்களுக்கு உதவி வருகிறோம்….. செயல்களை மதிப்பிடு…!!!” என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் நேற்று டாக்டர் அம்பேத்கர் அவர்கள் படத்தை அவமரியாதை செய்துவிட்டேன் என சமூக ஊடகங்களில் ஒரு சிலர் குறிப்பிட்டதாக அறிந்தேன்….
அது தவறு…
என் வீட்டின் முன்பகுதியில் தான்
ஓவ்வொரு நாளும் பட்டியலின பெண்களுக்கு உதவி வருகிறோம்…..செயல்களை மதிப்பிடு…!!! pic.twitter.com/w9NLpnK4ZI
— Vanathi Srinivasan (@VanathiBJP) April 15, 2020
மேலும், அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, செருப்பு வைக்கும் ஸ்டான்ட் அது இல்லை. என் வீட்டிற்கு வருபவர்களுக்கு அது தெரியும் என்று கூறி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் வானதி சீனிவாசன்.