செருப்புமாலை அணிந்து பாஜக அலுவலகத்தில் நுழைந்த பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் சரமாரி தாக்குதல்

 

செருப்புமாலை அணிந்து பாஜக அலுவலகத்தில் நுழைந்த பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் சரமாரி தாக்குதல்

செருப்பு மாலை அணிந்து, சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்ற சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது காவல்துறையினரின் முன்னிலையிலேயே பாஜக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செருப்பு மாலை அணிந்து, சேலம் பாஜக அலுவலகத்திற்கு சென்ற சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது காவல்துறையினரின் முன்னிலையிலேயே பாஜக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Piyush Manush
பொருளாதார மந்தநிலை, காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்புவதற்காக சேலம் பாஜக அலுவலகத்திற்கு பியூஸ் மனுஷ் சென்றுள்ளார். அப்போது  அங்கிருந்த  நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அவர்களிடம் வாக்குவாதம் முற்றியதையடுத்து பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர்  தாக்குதல் நடத்தினர். காவல்துறையினர் இருந்த நிலையிலும் பியூஸ் மனுஷ் மீது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பியூஸ் மானுஷை காவல்துறையினர் அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.