செரிமானத்தை தூண்டும் பூண்டுக்குழம்பு
வாயுத்தொல்லை, அஜீரணத்தால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு வாரம் ஒருமுறை பூண்டுக்குழம்பு செய்து கொடுத்தால் அந்தத் தொந்தரவுகள் எல்லாம் போயே போய்விடும்.
வாயுத்தொல்லை, அஜீரணத்தால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு வாரம் ஒருமுறை பூண்டுக்குழம்பு செய்து கொடுத்தால் அந்தத் தொந்தரவுகள் எல்லாம் போயே போய்விடும்.
தேவையான பொருட்கள்:
பூண்டு: 15 பல்
சின்ன வெங்காயம்: 50 கி(பொடியாக நறுக்கிய)
தக்காளி: 1(பொடியாக நறுக்கிய)
புளிக்கரைசல்: 100 மி
சாம்பார் தூள்: 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்: 1 டீஸ்பூன்
தனியாத்தூள்: 1
டீஸ்பூன்
மஞ்சள் தூள்: 1 டீஸ்பூன்
உளுந்து: 1 டீஸ்பூன்
கடுகு: 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிதளவு
கொத்தமல்லி: சிறிதளவு
நல்லெண்ணெய்: 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு சிறிது வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
பிறகு தோல் உரித்த பூண்டை போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள்; சாம்பார் தூள்; மிளகாய்த்தூள்; தனியாத்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
அதில் புளிக்கரைசலை சேர்க்கவும்.
தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டிப்பதம் வந்தவுடன் மீதமுள்ள ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.
இறுதியில் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.
சூடான சாதத்தில் சிறிது நெய் ஊற்றி பரிமாறவும்.