செய்தியாளர்கள் சந்திப்பில் கண்கலங்கிய ரஜினி! கவனித்தீர்களா!

 

செய்தியாளர்கள் சந்திப்பில் கண்கலங்கிய ரஜினி! கவனித்தீர்களா!

மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி தெரிந்தால்தான் அரசியல் கட்சி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது

மக்களிடம் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி தெரிந்தால்தான் அரசியல் கட்சி என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். இது அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்ற சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதுநாள் வரை வீட்டு வாசலில் பேட்டி அளித்துக்கொண்டிருந்த ரஜினிகாந்த், இன்று நட்சத்திர ஹோட்டலில் பேட்டி அளித்துள்ளார். பேட்டி என்று சொல்வதைவிட, தான் பேச நினைத்ததைப் பேசிவிட்டு சென்றுவிட்டார். நிருபர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் புறப்பட்டுச் சென்றது நிருபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தன்னுடைய பேட்டியின்போது, “மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி அறிவிப்பு வரும். மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்த மக்கள் மன்ற நிர்வாகிகள் செல்ல வேண்டும். மாற்றம் ஏற்படும் என்று தெரியாமல் அரசியல் கட்சி துவங்கி என்ன பலன்” என்றார். 

 

 

பேசிக்கொண்டிருக்கும் போதே இடையில், “எனக்கு வயது என்ன 44ஆ அல்லது 50 ஆ… இப்ப விட்ட அப்பறம் ஆட்சியை பிடிக்கலாம் என கூறியதற்கு… வயது 71.  பிழைத்து வந்திருக்கிறேன். உடம்பில் ஆயிரம் பிரச்னைகள், காய்ச்சல் எல்லாம் இருக்கிறது. இப்போது ஆட்சியை பிடித்தால்தான் உண்டு, அடுத்த தேர்தலில் எல்லாம் பார்த்து கொள்ள முடியாது ” என்றார்.