“செய்தியாளர்கள் கோவிட்-19 பாஸ் வாங்க தேவையில்லை” – மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு

 

“செய்தியாளர்கள் கோவிட்-19 பாஸ் வாங்க தேவையில்லை” – மக்கள் தொடர்பு அலுவலர் அறிவிப்பு

செய்தியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் கோவிட்-19 பாஸ் வாங்கத் தேவையில்லை என சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் அறிவித்துள்ளார்.

சென்னை: செய்தியாளர்கள் மற்றும் ஊடகத் துறையினர் கோவிட்-19 பாஸ் வாங்கத் தேவையில்லை என சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் அறிவித்துள்ளார்.

பத்திரிகை, ஊடகம் மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு கோவிட்-19 பாஸ் தேவையில்லை என்று சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் அறிவித்துள்ளார். தற்போது அவர்கள் வைத்திருக்கும் அங்கீகார அட்டை அல்லது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பிப்பதே ஊடக நபர்களுக்கு போதுமானது என கூறப்பட்டுள்ளது.

ttn

அதனால் பத்திரிகை, ஊடகத்துறையினர் அங்கீகார அட்டை அல்லது அடையாள அட்டையை தங்களுடன் எடுத்துச் சென்று கவரேஜுக்குச் செல்லும்போது அதை அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி மக்கள் தொடர்பு அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.