செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள்.. இரண்டே மணி நேரத்தில் போலீசிடம் சிக்க வைத்த பெண் !

 

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள்.. இரண்டே மணி நேரத்தில் போலீசிடம் சிக்க வைத்த பெண் !

துரிதமாகச் செயல்பட்ட அந்த பெண், அந்த நபர்கள் வந்த பைக் எண்ணைப் பதிவு செய்து வைத்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் கல்லல் சந்தை பகுதியில் ரெட்டி என்னும் பெண் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு  நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்திலிருந்த  இரண்டு சவரன் தங்கச் சங்கிலி பறித்துச் சென்றுள்ளனர். உடனே துரிதமாகச் செயல்பட்ட அந்த பெண், அந்த நபர்கள் வந்த பைக் எண்ணைப் பதிவு செய்து வைத்துள்ளார். 

ttn

உடனே கல்லல் காவல்நிலையத்திற்குச் சென்ற அந்த பெண் நடந்தவற்றைக் கூறி,  அந்த பைக் எண்ணையும் போலீசாரிடம் கொடுத்துள்ளார். அதனைத்தொடர்ந்து அந்த எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு அந்த பைக் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்னர், அந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட  மணிகண்டன் மற்றும் வாணி கருப்பசாமி என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்து, அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர்.

ttn

மற்ற பெண்களை போல செயினை பறிகொடுத்து விட்டு காவல்நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்காமல், உடனே அந்த பைக் எண்ணைப் பதிவு செய்து துரிதமாக செயல்பட்டதற்காக அங்கிருந்த போலீசார் அவருக்குப் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.