செப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்! கடிதம் மூலம் மிரட்டல்!!

 

செப்- 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்! கடிதம் மூலம் மிரட்டல்!!

செப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

செப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் கடிதம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

செப்.30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் வந்துள்ளது. இதனை டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடிதம்

இந்த கடிதமானது கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், நாங்கள் தடை செய்யப்பட்ட டெல்லி காலிஸ்தான் ஆதரவு குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் தனது மகனுடன் சேர்ந்து இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மிரட்டல் கடிதத்தையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.