சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் எளிதாக கொரோனா மாதிரி சேகரிப்பு செய்யும் நடைமுறை! வைரல் வீடியோ!
எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் 156பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738ஆக அதிகரித்துள்ளது. அதில் சென்னையில் 156பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் எளிதான மற்றும் பாதுகாப்பான முறையில் கொரோனா மாதிரி சேகரிப்பு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
#update: Chennai Stanley Hospital has installed the #WISK, Walk-in simple kiosk for easy & safer sample collection to test #COVID19 without PPE’s. The kiosk is fully sealed and comes with a pair of gloves which will be cleaned with sanitizer after every use. @MoHFW_INDIA pic.twitter.com/3tLZlRbrzz
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl) April 8, 2020
அதாவது கியோஸ்க் எனும் இந்த எளிய முறையில் ஒரு ஜோடி கையுறைகள் உள்ளது . அணிந்துகொண்டு பாதுகாப்பாக மாதிரி சேகரிக்கலாம். இது ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு சானிட்டீசருடன் சுத்தம் செய்யப்படும். மேலும் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக உள்ளது.