சென்னை வந்திறங்கிய தோனி… கொண்டாடத் தொடங்கிய ரசிகர்கள்

 

சென்னை வந்திறங்கிய தோனி… கொண்டாடத் தொடங்கிய ரசிகர்கள்

சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோணி சென்னை வந்திறங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. “ஒவ்வொரு வாத்து முதல் நாள் முதல் ஆட்டத்த்தில் ஏற்படும்  ஆரவாரத்திற்கு அனைவரும் காத்திருக்கிறார்கள். இப்போதே விசில் அடிக்கத் தொடங்குங்கள்!” என்று பதிவிட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்துள்ளார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிஎஸ்கே அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தோணி சென்னை வந்திறங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. “ஒவ்வொரு வாத்து முதல் நாள் முதல் ஆட்டத்தில் ஆரவாரம் விண்ணைப் பிளக்கும். இப்போதே விசில் அடிக்கத் தொடங்குங்கள்!” என்று பதிவிட்டுள்ளனர்.

dhoni-67

சி.எஸ்.கே தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் பேசுகையில், “தோனி மார்ச் 2 ஆம் தேதி சென்னை வந்து சேர்வார், மறுநாள் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பயிற்சியைத் தொடங்குவார்” என்றார்.

2019 -ம் உலகக்  கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணியுடன் நடந்த அரையிறுதி போட்டியில் தான் கடைசியாக தோனி விளையாடியிருந்தார். நீண்ட நாட்கள் தங்கள் நட்சத்திர வீரரைக் காணாத அவரது ரசிகர்கள் தோனி களத்தில் இறங்குவதைக் காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.

 

13-வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் மார்ச் 29-ல் தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங் அணி எதிர்கொள்கிறது.