சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு!

 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி தெளிப்பு!

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

உலகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை தடுக்க அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பல நாடுகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அதிநவீன இயந்திரங்களைக் கொண்டு கிருமி நாசினி தெளிக்கபட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. 

ttn

14 நிமிடங்கள் தொடர்ந்து மருந்து தெளிக்கும் திறன் கொண்ட அந்த ட்ரோன், 40 நிமிடங்கள் தொடர்ந்து 100 மீட்டர் உயரத்தில் பறக்குமாம். மேலும, ஒரு முறைக்கு 10 லிட்டர் கிருமிநாசினி தெளிக்கும் திறன் கொண்டதாம். இந்த ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிக்கும் நடவடிக்கை முதற்கட்டமாக மருத்துவமனைகளில் துவக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்துள்ளார்.