சென்னை மெட்ரோ நிறுவனத்தில் நடந்த கையாடல்: பெண் ஊழியர் அதிரடி கைது!

 

சென்னை மெட்ரோ நிறுவனத்தில் நடந்த கையாடல்: பெண் ஊழியர் அதிரடி கைது!

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் செம்மஞ்சேரியைச் சேர்ந்த பர்ஹத் பானு என்பவர் உதவி கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார்

சென்னை: மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பெண் ஊழியர் ஒருவர் 23 லட்ச ரூபாயை கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

metro

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் நிர்வாக அலுவலகத்தில் செம்மஞ்சேரியைச் சேர்ந்த பர்ஹத் பானு என்பவர் உதவி கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் பணியிலிருந்து விலகியுள்ளார்.  இதையடுத்து இவர் பணியிலிருக்கும் போது இருந்த கணக்குகளை சரிபார்த்த போது  அங்கிருந்த பணியாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பர்ஹத் பானு மெட்ரோ ரயில் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய ரூ.23 லட்சத்து 53 ஆயிரம் ரூபாயை உறவினர் வாங்கி கணக்குக்கு அனுப்பி கையாடல் செய்துள்ளார். இது குறித்து  மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இணை பொது மேலாளர் பார்த்திபன் சென்னை கோயம்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த  புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான பர்ஹத் பானுவை தேடி வந்தனர். 

arrested

இந்நிலையில் பர்ஹத் பானு செம்மஞ்சேரி பகுதிக்கு திரும்பி வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைக்க ஒங்கு விரைந்து சென்ற கோயம்பேடு போலீசார்  பர்ஹத் பானுவை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த எட்டு லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.