சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை.. விசாரணை தீவிரம் !

 

சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய ஊழியர் கழுத்தை அறுத்துக் கொலை.. விசாரணை தீவிரம் !

இவர் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தில் பணியாற்றி வந்தும், பகுதி நேரமாக ஆட்டோ ஒட்டி வருகிறாராம்.

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் வசித்து வருபவர் பூபதி(45). இவர் சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தில் பணியாற்றி வந்தும், பகுதி நேரமாக ஆட்டோ ஒட்டி வருகிறாராம். இவர் நேற்று மாலை தனது நண்பர்கள் ஆறுமுகம் மற்றும் சீனு ஆகியோர்களுடன் ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வேகமாக வந்த பைக் ஒன்று பூபதியின் ஆட்டோ மீது மோதியதால், பைக்கில் வந்த நபருக்கும் பூபதிக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், ஆட்டோவை ஆதனூரில் நிறுத்திவிட்டு தனது நண்பர்களை மது வாங்கிக்கொண்டு வருமாறு அனுப்பி வைத்து விட்டு பூபதி ஆட்டோவிலேயே இருந்துள்ளார். 

ttn

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பூபதியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பூபதியின் அலறல் சத்தம் கேட்டு அங்குச் சென்ற பொதுமக்கள் அவர் ரத்த வெள்ளத்துடன் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், பூபதி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொலையாளியைத் தேடி வருகின்றனர். மேலும், பூபதியின் கொலைக்கும் அவரது நண்பர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.