சென்னை மசாஜ் சென்டர்கள் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான மெசேஜ்…

 

சென்னை மசாஜ் சென்டர்கள் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கியமான மெசேஜ்…

இன்று நமக்கு வரக்கூடிய சர்வீஸ் மெசேஜ்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை மசாஜ் செண்டர்களில் இருந்து வருபவை. அவை அனைத்துமே நேரடியாக ‘அழைப்பு’ விடுபவை எனும் நிலையில் சென்னையில் தற்போதைக்கு மசாஜ் செண்டர்கள் இல்லாத தெருக்களே இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று நமக்கு வரக்கூடிய சர்வீஸ் மெசேஜ்களில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவை மசாஜ் செண்டர்களில் இருந்து வருபவை. அவை அனைத்துமே நேரடியாக ‘அழைப்பு’ விடுபவை எனும் நிலையில் சென்னையில் தற்போதைக்கு மசாஜ் செண்டர்கள் இல்லாத தெருக்களே இல்லை எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் நட்சத்திர ஓட்டல் மற்றும் சுற்றுலா தலங்களில் பாலியல் தொழில் ரகசியமாக நடந்து வந்தது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவுபடி தேடுதல் வேட்டை நடத்தி பெரிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமீனில் விடுதலையாகிமீண்டும் பாலியல் தொழிலில் தீவிரமாக இறங்கிவிட்டனர். இதனால் நகரில் பல இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் பாலியல் தொழில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

அதன்படி சென்னையில் தற்போது 500க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டு பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றன. இதில் மசாஜ் குறித்த எந்த பயிற்சியும் இல்லாத பெண்கள், இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களின் நோக்கம், பணம் பறிப்பதுதான். தற்போது சென்னை விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றும் போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் பணம் வீதம் வசூலித்து வருவதாகவும், இதனால் தான் தெருவுக்கு தெரு மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில்  சென்னை மாநகரில் புற்றீசல் போல பாலியல் தொழிலுக்காக தொடங்கப்பட்டுள்ள மசாஜ் சென்டர்கள் மீது உடனே கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றி தற்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ ஒருவர்  வடபழனி, அண்ணாநகர், திருமங்கலம், நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட 7  இடங்களில் ஆட்களை வைத்து அவரே நேரடியாக மசாஜ் சென்டர்களை நடத்தி வருவதாகவும், அங்கு பாலியல் தொழிலும் சேர்த்து நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இங்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலர் மட்டுமே பணம் பறிக்கும் இந்த கும்பலின் டெக்னிக் தெரிந்தவர்கள். மற்ற புதியவர்கள் அல்ப ஆசையில் உள்ளே நுழைந்து எக்கச்சமாய் ஏமாந்து அதை வெளியே சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.