சென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி?

 

சென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி?

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்தினர் , உறவினர்களுடன் தங்கியுள்ளார். அப்போது விடுதி அறைகளில் இருந்த  கேமராக்கள் மீது சுரேஷ்க்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் வரவேற்பரையில் இருந்த கணினியில் கேமரா காட்சிகளை சோதனையிட்ட போது, அவர்  குடும்பத்தை சேர்த்த பெண்  ஒருவர் உடை மாற்றும் காட்சி பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கதவில் இருக்கும் கேமரா வளாகத்தில் நடக்கும் காட்சிகளை மட்டுமே பதிவு செய்யும்,  உள்ளே நடப்பதை பதிவு செய்யாது என விடுதி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.