சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

 

சென்னை திரும்பினார் விஜயகாந்த்: தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த தேமுக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலையில் சென்னைக்குத் திரும்பினார்

சென்னை: மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்க சென்றிருந்த தேமுக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலையில் சென்னைக்குத் திரும்பினார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 18ம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு சென்று தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து இன்று காலையில் சென்னைக்கு விஜயகாந்த் திரும்புவார் என்று தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியானது.அதன்படி அதிகாலை 2 மணியளவில் சென்னை விமானநிலையத்துக்கு அவர் வந்தடைந்தார். அவருடன் விஜயகாந்த் மனைவியும் மகன்களும் உடன் வந்தனர்.விமானநிலையத்தில் ஏராளமாகத் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் வாழ்த்துக் கோஷங்களை எழுப்பி விஜயகாந்துக்கு உற்சாக வரவேற்பைத் தந்தனர்.