சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்த பாம்பு.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!

 

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்த பாம்பு.. அதிர்ச்சியடைந்த பயணிகள்!

சென்னையில் மெட்ரோ ரயில் அமல்படுத்தியதில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் அமல்படுத்தியதில் இருந்து நாள்தோறும் நூற்றுக் கணக்கான பயணிகள் மெட்ரோவில் பயணம் செய்து வருகின்றனர். அதன் கட்டணம் மட்டுமே மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வரும் நிலையில் அவ்வப்போது சலுகைகள் கொடுத்து மெட்ரோ நிர்வாகம் அசத்தி வருகிறது. ஆரம்பத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கையை விட இப்போது அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், இன்று காலை சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்த நகரும் படிக்கட்டு பாதியிலேயே நின்றுள்ளது. 

ttn

உடனே ஊழியர்கள் நகரும் படிக்கட்டுகளைச் சரிசெய்ய முயன்றுள்ளனர். அப்போது, அதன் அடியில் 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இறந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில்நுட்ப வசதிகள் அதிகமாகக் கொண்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் எப்போதுமே தீவிர பாதுகாப்பு இருக்கும். ஆனால், அதையும் மீறி மக்கள் பயன்படுத்தும் நகரும் படிக்கட்டுகளில் ஒரு பாம்பு நுழைந்துள்ளது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.