சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் பயங்கர தீ விபத்து: ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

 

சென்னை சில்க்ஸ் துணிக் கடையில் பயங்கர தீ விபத்து: ரூ. 2 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

கோவில்பட்டியில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கோவில்பட்டியில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இதனைக் கண்டதும் விளாத்திகுளம் மற்றும் கழுகுமலை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையின் மூன்று வாகனங்களும் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளனர். சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் உள்ள 3 மாடி முழுவதும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால், தீயணைப்புத் துறையினரால் உடனே தீயைக் கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை. அதன் பின், பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

Fire accident

இந்த தீ விபத்தில் சென்னை சில்க்ஸ் துணிக்கடையிலிருந்த ரூபாய். 2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும், கடையின் வாசலில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த இரண்டு இரு சக்கர வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளது. இரவு நேரத்தில் இந்த தீ விபத்து நடந்ததால், எந்த வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை. இந்த திடீர் தீவிபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.