சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும்: ஓபிஎஸ்

 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும்: ஓபிஎஸ்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவு பரவியதற்கு முக்கிய காரணம் சென்னை கோயம்பேடு மார்க்கெட் தான். மார்க்கெட்டில் வேலை பார்த்த ஒரு சில வியாபாரிகளுக்கு கொரோனா பரவியதால், மார்க்கெட்டுக்கு வந்த மக்கள், காய்கறிகள் இறக்குமதி செய்ய வந்த பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது. சென்னையிலும் அதிகளவு கொரோனா பரவியதற்கும் இதுவே காரணம்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ஆம் தேதி திறக்கப்படும்: ஓபிஎஸ்

இதனையடுத்து கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டது. ஆனால், கோயம்பேட்டை போல திருமழிசையில் வியாபாரம் நடக்கவில்லை என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியது. திறக்கப்பட உள்ள கோயம்பேடு மார்க்கெட்டை துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்கப்படும் என்றும் உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி செப்.18ந் தேதி திறக்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.கோயம்பேடு சந்தைக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனக்கூறிய ஓ. பன்னீர் செல்வம், கோயம்பேடு அங்காடியில் முகக்கவசம், தனிநபர் இடைவெளி போன்ற அரசின் விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.