சென்னை- கொல்கத்தா ஐபிஎல் போட்டி: ஷாருக்கானுடன் இயக்குநர் அட்லீ குடும்பம்; உறுதியானது மெர்சல் கூட்டணி?

 

சென்னை- கொல்கத்தா ஐபிஎல் போட்டி: ஷாருக்கானுடன் இயக்குநர் அட்லீ குடும்பம்; உறுதியானது மெர்சல் கூட்டணி?

சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நடிகர் ஷாருக்கானுடன் இயக்குநர் அட்லீ கண்டுகளித்தார். 

சென்னை: சென்னை – கொல்கத்தா அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை நடிகர் ஷாருக்கானுடன் இயக்குநர் அட்லீ கண்டுகளித்தார். 

கோடிகளை  தாண்டிய மெர்சல் 

mersal

 

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்று ஹிட் அடித்தது. இந்தப் படத்தில் நடிகர் வடிவேலு, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்தனர். பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தின் வசூல் ரூ.250 கோடியைத் தாண்டியதாகக் கூறப்படுகிறது.

இந்தி ரீமேக்

சர்வதேச அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற மெர்சல் திரைப்படம்  இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இயக்குநர்  அட்லீயே இப்படத்தை இந்தியிலும் இயக்கவுள்ளார்,. மேலும் இதில் விஜய் கதாபாத்திரத்தில்  பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஷாருக்கானுடன் அட்லீ குடும்பம் 

sharuk

 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 23-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. அப்போது கொல்கத்தா அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான் சேப்பாக்கம் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவருடன்  இயக்குநர்அட்லீ யும், அவரது மனைவி ப்ரியாவும் உடன் வந்திருந்தனர். 

sharuk

அதன்படி மெர்சல் இந்தி ரீமேக்கில்  ஷாருக்கான் நடிப்பது உறுதியாகியுள்ளதாக சினிமா விமர்சகர்கள் கருத்து  தெரிவித்து வருகின்றனர். எனவே விரைவில் இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

இதையும் வாசிக்க: தூங்காத என் கண்களை பார்த்து வாக்களியுங்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கம்!