சென்னை, காஞ்சிபுரம், ஈரோட்டுக்கு 144 தடை உத்தரவு தொடரும் – மத்திய அரசு

 

சென்னை, காஞ்சிபுரம், ஈரோட்டுக்கு 144 தடை உத்தரவு தொடரும் – மத்திய அரசு

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஆபத்தான நோய்  தொற்றிலிருந்து  தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்தியாவில்   370 க்கு மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிக்கப்பட்டது.

bus

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈராோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று மாவட்டங்களிலும் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வந்தால்தான் எத்தகைய நடவடிக்கை என்பதை தெரிவிக்க முடியும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து சேவைகளையும் முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.