சென்னை கவின் கலை இசைக் கல்லூரிக்கு குற்றவாளி ஜெயலலிதாவின் பெயரா?

 

சென்னை கவின் கலை இசைக் கல்லூரிக்கு குற்றவாளி ஜெயலலிதாவின் பெயரா?

சென்னை: கவின் கலை இசைக் கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கலைவாணர் அரங்கத்தில், மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கான 6000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது. இதில் பேசிய முதல்வர் பழனிசாமி, கவின் கலை இசைக் கல்லூரிக்கு ஜெயலலிதா பெயர் சூட்டப்படும் என அறிவித்தார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.

சொத்துக் குவிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பெயரை கல்லூரிக்கு சூட்டுவது எப்படி சரியாகும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.