சென்னை உள்பட தமிழகத்தில் பரவலான மழை: மக்கள் உற்சாகம்!
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பரவலாக இரவிலிருந்து மழை பெய்தது.
சென்னை: சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் பரவலாக இரவிலிருந்து மழை பெய்தது.
சென்னையை பொறுத்தவரையில் நேற்று மாலை முதலே பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக மயிலாப்பூர், மடிப்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், வேளச்சேரி, நங்கநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. அயனாவரம், ராமாபுரம், பூவிருந்தவல்லி போன்ற இடங்களில் நேற்று இரவே மழை பெய்யத் தொடங்கியது. அதே போல் அதிகாலை முதலே மீண்டும் பல இடங்களில் மழை பெய்தது.
காஞ்சிபுரம், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரையில் அங்கும் பரவலான மழை பெய்து வருகிறது.