சென்னை அருகே வானகரத்தில் கொரோனா சிகிச்சையில் இருந்த 56 வயது நபர் உயிரிழப்பு !
Apr 20, 2020, 17:57 IST1587385673000
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக சென்னையில் 250 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி 411 பேர் கொரோனாவிலிருந்து சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் மார்ச் 31ஆம் தேதி முதல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சென்னை வானகரத்தை சேர்ந்த 56 வயது பெண் இன்று உயிரிழந்தார்.