சென்னை அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென பற்றிய தீ : மீட்புப் பணி தீவிரம் !

 

சென்னை அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென பற்றிய தீ : மீட்புப் பணி தீவிரம் !

சென்னை தி.நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அதில் 4 ஆவது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில்  திடீரென தீ பற்றியுள்ளது.

சென்னை தி.நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அதில் 4 ஆவது மாடியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில்  திடீரென தீ பற்றியுள்ளது. அலுவலகத்தின் கீழ் உள்ள மாடியில் இருந்தவர்களின் அலறல் சத்தத்தால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காவல் துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். 

fie

அதன் பின்னர் அந்த இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் 4 ஆவது மாடியில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அங்கு ஏற்பட்டுள்ள தீயையும் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.

 

இது குறித்துக் காவல் துறையினர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், அந்த தனியார் நிறுவனம் சேகர் ரெட்டி என்பவருக்குச் சொந்தமானது என்று தெரியவந்துள்ளது. மேலும், 4 ஆவது மாடியில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதா.. அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் ஏதேனும் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை.