சென்னையையும் யூனியன் பிரதேசமாக மாற்றினாலும் மாற்றுவார்கள்! ஆனா நான் விடமாட்டேன் – சீமான்

 

சென்னையையும் யூனியன் பிரதேசமாக மாற்றினாலும் மாற்றுவார்கள்! ஆனா நான் விடமாட்டேன் – சீமான்

காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2ஆக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

சென்னையையும் யூனியன் பிரதேசமாக மாற்றினாலும் மாற்றுவார்கள்! ஆனா நான் விடமாட்டேன் – சீமான்

காஷ்மீரை போல தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என 2ஆக பிரிப்பார்கள் என நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 சட்டப்பிரிவு கடந்த 5-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதற்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ காஷ்மீரை போல  தமிழகத்தையும் வட தமிழகம், தென் தமிழகம் என இரண்டாக பிரிப்பார்கள். சென்னையையும் புதுச்சேரி போல யூனியன் பிரேதசமாக மாற்றுவார்கள். தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பதற்கு நான்விட மாட்டேன். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம், ஆனால் மாநிலங்களை பிரிக்கக் கூடாது” எனக் கூறினார்.