சென்னையில் 172பேருக்கு கொரோனா! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

 

சென்னையில் 172பேருக்கு கொரோனா! தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேருக்கு பாதிப்பு?

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 800க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனவால் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இன்று ஒரேநாளில் 96 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் 800க்கும் மேற்பட்டோர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.  அதாவது சென்னையில் 172பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 86பேருக்கும் திண்டுக்கல்லில் 54 பேருக்கும் திருநெல்வேலியில் 56 பேருக்கும், ஈரோட்டில்  60, திருச்சியில் 36 பேருக்கும்,நாமக்கல் 41 மற்றும் ராணிப்பேட்டை 36, செங்கல்பட்டு 30, மதுரை 25,கரூரில் 23, தேனியில் 40, தூத்துக்குடியில் 24, விழுப்புரத்தில் 23 பேருக்கும் கொரோனா தொற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

List

இதேபோல் திருப்பூரில் 26, கடலூர் மற்றும் சேலத்தில் 14, திருவள்ளூர், திருவாரூரில் தலா 13, விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் தலா 11, நாகப்பட்டினம் 12, திருப்பத்தூர் 16, திருவண்ணாமலையில் 10, கன்னியாகுமரியில் 15 மற்றும் காஞ்சிபுரத்தில் 6 பேருக்கும், சிவகங்கை 6மற்றும் வேலூரில் 11 பேருக்கும், நீலகிரியில் 7 பேருக்கும், தென்காசி, கள்ளக்குறிச்சியில் தலா 3 பேருக்கும் ராமநாதபுரத்தில் இருவருக்கும், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.