சென்னையில் வரும் 21 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் !

 

சென்னையில் வரும் 21 ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் !

சென்னை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விடுமுறை இந்த மாதத்திற்குள் ஈடுசெய்யப்படும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகக் கடந்த 2 ஆம் தேதி பெய்த கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, கடலூர், செங்கல்பட்டு, ராமநாதபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்குக் கடந்த 2 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னை மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விடுமுறை இந்த மாதத்திற்குள் ஈடுசெய்யப்படும் என்றும் அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார். 

rttn

 

அதன் படி, டிசம்பர் 2 ஆம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 21ம் தேதி ( சனிக்கிழமை) சென்னையில் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் தெரிவித்துள்ளார்.