சென்னையில் வரும் 19 ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து

 

சென்னையில் வரும் 19 ஆம் தேதி போலியோ சொட்டுமருந்து

சென்னை மாநகராட்சி முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 19 ஆம் தேதி 7 மணிமுதல் மாலை 5 மணி வரை  நடைபெறவுள்ளது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இதற்காக சென்னை முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள் என மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போலியோ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

போலியோ சொட்டு மருந்து

மேலும் பேருந்து நிலையங்கள், காய்கறி சந்தைகள், வணிக வளாகங்கள், விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகள் போன்ற இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தவறாமல் அழைத்து வந்து பெற்றோர்  போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.